Thursday 21 March 2013

அவரவர்





அவனுக்குச் சொன்ன கவிதை
உனக்கில்லை
உனக்குச் சொல்லாத கவிதையும்
அவளுக்கில்லை
ஆனாலும்
அவரவருக்குச்
சொன்ன கவிதையே
அவரவருக்குப் புரியும்
ஆதலால்
அனைவருக்கும்
புரியும் கவிதையென்று
அவனியில்
யாதொன்றுமில்லை
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.



No comments:

Post a Comment